20 தொகுதிகள் இடைத்தேர்தல்: புதிய கட்சிகள் பயன்படுத்துமா?
18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என இன்று காலை தீர்ப்பு வெளிவந்துள்ளதால் இப்போதைக்கு அதிமுக ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றாலும் இந்த 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவை பொருத்துதான் இந்த ஆட்சி நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது தெரியவரும்
இந்த நிலையில் புதியதாக வந்த கட்சிகளும், ஏற்கனவே மக்களின் ஆதரவை பெற முடியாமல் திணறி வரும் கட்சிகளும் இந்த 20 தொகுதிகள் இடைத்தேர்தலை சரியாக பயன்படுத்தி தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக கமல்ஹாசன் ஆரம்பித்த கட்சி, ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருக்கும் கட்சி, மக்களின் ஆதரவை இழந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மக்களின் நாடியை தெரிந்து கொள்ள இந்த இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்
Leave a Reply
You must be logged in to post a comment.