shadow

20 தொகுதிகள் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் மறைவு காரணமாகவும், 18 எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதன் காரணமாகவும் தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த 20 தொகுதிகளிலும் கஜா புயல் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியதாவது:

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், ஆணையமே தமிழக அரசிடம் கருத்து கேட்கும். தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

 

Leave a Reply