20 வயது பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலத்தில் அழைத்து சென்ற விவகாரம்:மனித உரிமை ஆணையம் தலையீடு
பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருந்தார். அந்த இளைஞரின் மரணத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் தான் காரணமாக இருக்கும் என்று சந்தேகப்பட்ட அந்த பகுதி மக்கள், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தானாக தலையிட்டுள்ள தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்து 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என பீகார் அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு வழங்க அம்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பல்வேறு பெண்கள் அமைப்பு களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.