கொரோனா வைரஸ்: மீண்டும் நல்ல செய்தி சொன்ன விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 42 பேர்களில் இருவர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் இருவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதை அடுத்து அவர்கள் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்

இருப்பினும் அவர்கள் இருவரும் தங்களது வீட்டில் 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார் இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக குறைந்துள்ளது என்பது விஜயபாஸ்கர் கூறிய நல்ல செய்திகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply