2-வது நாளாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு.

மெரோ ரயில் பணியாளர்கள் பற்றாக்குறையால், சென்ட்ரல் – ஏர்போர்ட் வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொழில்நுட்ப உதவி வழங்கும் நிறுவனங்களின் ஒப்பந்த ஊழியர்களை வைத்து மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் சங்கம் அமைத்ததாக கூறி எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மெட்ரோ ஊழியர்கள் போராட்டம் செய்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் பாதிப்பு அடைந்தது. இன்று இந்த பிரச்சனை குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது

Leave a Reply