2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு
சபரிமலைக்குள் சென்று ஐயப்பன் சன்னிதானத்திற்கு செல்ல செய்தி வாசிப்பாளர் கவிதா என்பவரும் அவருடன் ரஹானே பாத்திமா என்பவரும் பலத்த போலீஸ் காவலுடன் சென்றுள்ளனர்.
ஆனால் இரண்டு பெண்களையும் உடனடியாக திருப்பி அனுப்ப தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்த் போலீசார் கவிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள் என மேல்சாந்திக்கு பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.