2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு வேலைக்கு செல்லும் பெண் போலீஸ்
தாய்மை என்பதற்கு ஈடு இணை இல்லை என்பது உலகில் பல உதாரண சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டேதான் உள்ளது. அந்த வகையில் தற்போது நொயிடா பகுதியிலும் ஒரு தாய்மைக்கு பெருமை சேர்க்கும் சம்பவம் நடந்துள்ளது.
நொயிட்டாவில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் காமினி என்ற பெண் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. குழந்தைகளை வீட்டில் பார்த்து கொள்ள யாரும் இல்லை என்பதால் இவர் தனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து அவர்களை தூங்க வைத்துவிட்டு தனது பணியை தொடர்கிறார். வீட்டிற்கு பணிமுடிந்து செல்லும்போது உடன் அழைத்து செல்கிறார்.
கடமையும் தவறாது, தாயின் கடமையும் செய்து வரும் இந்த பெண் போலீசுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாமே!
Leave a Reply
You must be logged in to post a comment.