2 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து மரணம்: பிரசாந்த் கிஷோர் வேண்டாம் என தொண்டர்கள் கோரிக்கை

திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்கள் நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில் இன்று குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்களும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் திமுக தொண்டர்கள் சிலர் சமூக வலைதள பக்கங்களில் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு ஆலோசனை கொடுக்க வந்ததிலிருந்தே திமுகவுக்கு நேரம் சரியில்லை என்றும் அவர் வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்

திமுக தொண்டர்களின் இந்த கோரிக்கையை திமுக தலைவர் முக ஸ்டாலின் பரிசீலிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply