2வது நாளாக ‘சர்கார்’ காட்சிகள் ரத்து: படக்குழுவினர் அதிர்ச்சி
விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் இரண்டு நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடிய நிலையில் மூன்றாவது நாளே அதிமுகவினர்களின் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் இன்று காலையிலேயே திரண்டதால் படக்காட்சி ரத்து செய்யப்பட்டதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்தது.
அதேபோல் காஞ்சிபுரத்திலும் அ.தி.மு.கவினர் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கு முன்பு திரண்டு சர்கார் திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.