shadow

2வது டி-20 போட்டியில் இந்தியாவுக்கு 2வது வெற்றி கிடைக்குமா?

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் டி-20 போட்டியில் அபார வெற்றியை பெற்ற இந்திய அணி இன்று 2வது டி-20 போட்டியில் விளையாடவுள்ளது.

ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதால் நியூசிலாந்து அணியினர் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நியூசிலாந்து அணியில் மார்டின் குப்தில், முன்ரோ, வில்லியம்சன், டாம் லாதம், புரூஸ் நிக்கோலஸ் போன்ற அதிரடி பேட்ச்மேன்களும் , சவுத்தி, போல்ட், சான்ட்ரோ, கிரான்ட் ஹோம், சோதி போன்ற அதிரடி பந்துவீச்சாளர்களும் உள்ளனர். ஆனாலும் இந்தியா முதல் போட்டி போலவே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply