2வது ஓவரிலேயே முடிவுக்கு வந்த ராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது
நேற்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை இந்தியா வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் இன்றைய இரண்டாவது ஓவரின் 5வது மற்றும் 6வது பந்தில் இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்து நதீம் எடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக தாய்மண்ணில் 11வது தொடர் வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வி அடையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.