2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்ததையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2ஜி வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது என்பதும், இந்த மனுவை வரும் ஜூலை 30ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது என்பதும், வழக்கு நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply