shadow

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு

தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.2 லட்சம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட 2ஜி வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவரின் மகளும் எம்பியுமான கனிமொழி உள்பட 14 பேர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

6 வருடங்கள் நடந்து வந்த இந்த வழக்கை நீதிபதி ஷைனி அவர்கள் விசாரணை செய்து வந்தார். ஏற்கனவே தமிழக அரசியல் களம் பரபரப்புடன் இருக்கும் சூழ்நிலையில் இந்த தீர்ப்பு ராஜா, கனிமொழிக்கு பாதகமாக வந்தால் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply