shadow

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி டிசம்பர் 5க்கு திடீர்மாற்றம்

இந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டு மக்களும் ஊடகங்களும் தீர்ப்பு தேதியை எதிர்பார்த்து காத்திருந்தன.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி, இந்த வழக்கின் தீர்ப்பு தேதியை டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் தயாராகாததால் இந்த ஒத்திவைப்பு என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜ்யசபா எம்பி கனிமொழியை நேற்று பிரதமர் சென்னை வந்திருந்தபோது பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.