shadow

2ஜி அலைக்கற்றை வழக்கு: மேல்முறையீடு செய்தது அமலாக்கப்பிரிவு

2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கப்பிரிவு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பவர்களான ஆ.ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர்களுக்கு எதிரான சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கப்பிரிவு தவறிவிட்டதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி சைனி விடுவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கப்பிரிவு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

 

Leave a Reply