2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு: திமுகவுக்கு நெருக்கடியா?
தமிழக அரசியல் ஏற்கனவே ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் நிலையில் வலுவான எதிர்க்கட்சியான திமுக அதிரடி நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
ஆனால் திமுகவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் தற்போது 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் சற்றுமுன்னர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25ஆம் தேதி வெளிவரும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பு ஆ.ராஜா மற்றும் கனிமொழிக்கு பாதகமாக வந்தால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.