1980ஆம் ஆண்டு அரியர் வைத்துள்ளீர்களா? இதோ உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு!
1980ஆம் ஆண்டு முதல் தொலைதூரக் கல்வியில் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற இரண்டு சிறப்பு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பட்டம் பெற முடியாமல் தவிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற இதுவொரு சிறப்பு என்றும், இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னைப் பல்கலைக்கழகம் இந்த வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உடனடியாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்தமைக்கான சான்று வழங்கப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.