1971 சேலம் மாநாட்டின் புகைப்படங்களை வெளியிட்ட ஆங்கில ஊடகம்
1971 ஆம் ஆண்டு சேலத்துக் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து சமீபத்தில் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்சையை ஆகியுள்ள நிலையில் ரஜினிகாந்த் நடக்காத ஒன்றை பேசியதாக திராவிடர் கழகத் தலைவர்கள் குற்றம் சாட்டினார். அதுமட்டுமன்றி அவர் மீது போலீஸ் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் ரஜினிகாந்த் பேசியது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று புகைப்படங்களுடன் கூடிய ஆதாரத்தை வெளியிட்டு உள்ளது. இந்த ஆதாரத்துக்கு பின்னராவது திராவிட கழகத்தினர் தங்களுடைய புகார்களை வாபஸ் பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
ரஜினிகாந்த் பேசியதை பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்காது. தேவையில்லாமல் புகார் கொடுத்து விஷயத்தை பெரிதாக்கி பெரியார் ஆதரவாளர்கள் தாங்களே வாங்கி கற்றுக் கொண்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.