196 நாட்கள் கழித்து சென்னையில் மழை! குளிர்ந்த மக்கள்

196 நாட்கள் கழித்து சென்னையில் மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகமாகியுள்ளன. கடந்த ஆறு மாதங்களாக வெப்பத்தால் சுட்டெரிக்கப்பட்ட சென்னை மக்கள் நீண்ட இடைவெளிக்கு பின் இன்று குளிர்ச்சியை உணர்ந்தனர்

தென் மாவட்டங்களிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் சென்னை மக்கள் மழையை மறக்கும் அளவுக்கு கடந்த ஆறு மாதங்களாக மழையே இல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் இன்று சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

இவ்வாறு பெய்யும் மழையின் நீரை சேமிக்க வேண்டும் என்ற அக்கறை இனி சென்னை மக்களுக்கு தானாக ஏற்பட்டுவிடும். ஏனெனில் தண்ணீர் கஷ்டத்தின் உச்சத்தை கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் அனுபவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply