shadow

19 பந்துகளில் 47 ரன்கள். பாகிஸ்தானை பழிவாங்கிய பெரரா

பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் உலக லெவன் அணி தற்போது அங்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது

முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உலக லெவன் அணி 19.5 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அம்லா 75 ரன்களும், பெரரா 47ரன்களும் எடுத்து வெற்றிக்கு அடிகோலினர். 19 பந்துகளில் 47 ரன் அடித்த பெரரா ஆட்டநாயகன் விருதினை வென்றார்

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி-20 போட்டி வரும் 15ஆம் தேதி லாகூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணியாக இருக்கும்

Leave a Reply