18 மாதங்களுக்கு முன் கடலில் மூழ்கிய உயிரோடு வந்த அதிசயம்: விசித்திர சக்தி காப்பாற்றியதா?
இந்தோனேசியா நாட்டில் சுகாபூமி என்ற தீவை சேர்ந்த 31 வயது பெண் சுனாரிஷ் என்பாவ்ர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தபோது திடீரென வந்த ராட்சத அலை அவரஒ இழுத்து சென்றுவிட்டது. அதன்பின்னர் அவரை பல நாட்கள் தேடியும் கிடைக்காததால் , அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில் சுனாரிஷின் தந்தை கனவில் தோன்றிய சுனாரிஷ் நான் உயிரோடு தான் இருக்கிறேன். கடலில் மூழ்கிய பகுதி அருகே தான் உள்ளேன். என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் கனவு என்பதால் சுனாரிஷ் தந்தை இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் கனவு தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் தந்தையும், சுனாரிசின் சகோதரியும் அந்த பகுதிக்கு தேடி சென்றனர். நீண்ட நேரம் தேடிய பின்னர் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை மீட்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவரும் சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்து கொண்டார். ஆனால், பேசும் நிலையில் இல்லை. சில நாட்களில் பேச்சு வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.
18 மாதங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியவர் எப்படி உயிரோடு வந்தார்? என்பது மர்மமாக இருக்கிறது. அவரிடம் ஏதோ விசித்திர சக்தி இருப்பதாகவும், அதனால் தான் அவர் உயிருடன் வந்து விட்டார் என்று மக்கள் கூறுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.