18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டி: கமல்ஹாசன்
தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.,
இதுகுறித்து கமல்ஹாசன் மேலும் கூறியபோது, ’18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனுக்களை பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளது என்பதும், அதில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் கோவையில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.