18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு எப்போது?
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வெளிவந்தால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி நெருங்கிவிட்டதாக தெரிகிறது.
இந்த வழக்கில் தினகரன் தரப்பு, சபாநாயகர் தரப்பு மற்றும் தமிழக அரசின் தரப்பின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் வியாழன் அன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெறவுள்ளதாகவும், அன்றுடன் இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைவதால் அன்றைய தினம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு சுப்ரீம் கோர்ட் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு பெரிய அளவில் தமிழக அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.