18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று விறுவிறுப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் தகுதி நீக்கத்திற்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆனால் அதே நேரத்தில் மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும், இந்த வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் பேரவைச்செயலாளர், முதலமைச்சர், அரசு கொறடா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.