18 எம்.எல்.ஏகள் வழக்கு: மேல்முறையீடு இல்லை என தினகரன் அறிவிப்பு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று டிடிவி தினகரன் உறுதிபட கூறியுள்ளார். மேலும் தாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், 20 தொகுதிகளிலும் அமமுக வெற்றிபெறும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மண்குதிரை என என்னை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இடைத்தேர்தல் முடிந்த பின்னர், மண் குதிரை யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்
மேல்முறையீடு இல்லை என்று தினகரன் முடிவு செய்ததை அடுத்து 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருவது உறுதியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.