18 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டி: கமல் அதிரடி முடிவு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ள நிலையில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனுவை இன்று முதல் தலைமை அலுவலகத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் எம்.எல்.ஏவுக்கு போட்டியிடுவாரா? அல்லது எம்பிக்கு போட்டியிடுவாரா? என்பது குறித்த உறுதியான செய்திகள் வெளிவரவில்லை. இதுகுறித்து வரும் 24ஆம் தேதி கோவையில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply