18 எம்.எம்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது? புதிய தகவல்
18 எம்.எம்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தபோது இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கு மீண்டும் மூன்றாம் நீதிபதியிடம் சென்றுள்ளது. இந்த நிலையில் மூன்றாம் நீதிபதி எம்.சத்யநாராயணன் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் நிலை உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில் நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இருப்பினும் இந்த தீர்ப்பால் ஆட்சிக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்படும் தரப்பு சுப்ரீம் கோர்ட்டை அணுக வாய்ப்பு இருப்பதால் தீர்ப்புக்கு பின்னரும் தற்போதைய நிலையே நீடிக்கும் என கருதப்படுகிறது.
18 எம்.எல்.ஏக்கள், தீர்ப்பு, வழக்கு
Leave a Reply
You must be logged in to post a comment.