கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோர்டான் நாட்டின் பைலட் ஒருவரை கூண்டு ஒன்றில் அடைத்து வைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அவரை உயிரோடு கொளுத்தி கொலை செய்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில் நேற்று மேலும் 17 குர்தீஷ் வீரர்களை அதேபோன்று கூண்டு சிறையில் வைத்து உயிரோடு கொளுத்தி கொலை செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனால் உலகத்தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈராக் நகரின் மையப்பகுதியான கிர்குக் என்ற பகுதியில் பொதுமக்கள் முன்னே நடந்த கொடூர தண்டனைக்கு உலகதலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
17 குர்தீஷ் வீரர்களும் தீயில் துடிதுடித்து மரணம் அடையும் காட்சியை வீடியோ எடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். நான்கு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ பெரும் பரபரப்புடன் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.