திகார் சிறை மோதலில் 17 கைதிகள் காயம்: தப்பிக்க திட்டமா?
திகார் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல், தப்பிப்பதற்கான திட்டமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நாட்டின் முக்கிய சிறைச்சாலையாக விளங்குவது திகார் சிறை. டெல்லியில் அமைந்துள்ள சிறைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைக் கைதிகள் இடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த சிறைக் காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
அந்த சம்பவத்தில் 17 கைதிகள் காயமடைந்தனர். உடனடியாக டி.டி.யு மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கைதிகள், சிறப்பு பாதுகாப்பு மிகுந்த அறைகளில் அடைக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோதலில் ஈடுப்பட்டனரா அல்லது சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.