17 சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் விருப்பமனு ஏன்? அதிமுக விளக்கம்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் ஏற்கனவே 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்பமனுவை பெற்றுவிட்ட அதிமுக, 17 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
17 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 13ம் தேதி விருப்ப மனுக்களை பெற்று அன்று மாலைக்குள் விருப்ப மனுக்களை வழங்க வேண்டும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.
மேலும் திருவாரூர் தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனு பெறப்பட்டுவிட்டதால் மீண்டும் விருப்ப மனு அளிக்க தேவையில்லை என்று அதிமுக விளக்கமளித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.