தேர்தல் தான் முடிந்து விட்டதே அப்புறம் என்ன போய் வேலையை பாருங்கள் என நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு சற்று முன்னர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’போய் வேலை இருந்தா பாருங்க’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிந்து விட்டன, ஆனால் தோல்வி பயத்தால் திமுகவினர் சிலர் சித்த பிரமை பிடித்தவர்கள் இன்னும் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். போய் வேலை இருந்தா பாருங்க. ஒரு பெண்ணை மதிக்காத கட்சியின் பேச்சு எப்படி இருக்கும்? அது தமிழ் மக்களுக்கு தெரியும்’ என்று பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply