மும்பைக்கு வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக அண்மையில் நடிகை கங்கனா ரானவத் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்
கங்கனாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என்றும், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு கங்கனா தனது டுவ்ட்டரில் மும்பைக்கு வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.