சமீபத்தில் இராமநாதபுரம் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னை தானியங்கி மற்றும் கண்னி மயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து வருண் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மிக்க நன்றி ராமநாதபுரம். நான் நிறைய கற்றுக்கொண்டேன். காவல் துறையில், என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் இவை. எனது குடும்பம் இங்கு இருப்பதால் சென்னைக்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சி. அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இணைந்திருங்கள், தொடர்பில் இருங்கள்…

 

Leave a Reply