முதல்வர் அறிவிப்பு

1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளன என்றும், * 14 நிறுவனங்கள் தங்கள் தொழிலை துவங்கி உள்ளன என்றும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

மேலும் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்றும், 95 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளன என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

தென்காசியில் 3980 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வாங்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் பழனிசாமி தென்காசியில் 2107 மகளிருக்கு வாகன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 937 பேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்

Leave a Reply