150 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வருகை!

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு இன்று இரவு 150 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகிறார்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதில் முதற்கட்டமாக 10 கம்பெனி துணைராணுவப் படையினர் வருகை தந்துள்ள நிலையில் 150 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது என்பதும் வரும் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply