15 வயது மகளுக்கு அபார்ஷன் மாத்திரை வாங்கி கொடுத்த தாய் கைது!

வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு அபார்ஷன் மாத்திரை வாங்கி கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம். இந்த நிலையில் 39 வயது பெண் ஒருவர் தனது 15 வயது மகள் முறைதவறி கருவுற்றதை அறிந்து மெடிக்கல் ஸ்டோரில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி தனது மகளுக்கு கொடுத்து அபார்ஷன் செய்துள்ளார்.

இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்த வழக்கு நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply