15 வயது சிறுமியை கடத்தி 6 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அச்சத்துடன் தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இவற்றை தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் கும்பகோணத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரை திடீரென 17 வயது சிறுவன் ஒருவன் கடத்தி ஒரு அறையில் பூட்டி வைத்து ஆறு நாட்கள் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது
இது குறித்து ஆறு நாட்களுக்குப் பின்னர் தகவல் அறிந்த போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து அவனிடம் விசாரணை செய்து வருகின்றனர். 15 வயது சிறுமியை கடத்திய 6 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கு வெறித்தனமாக இருந்த 17 வயது சிறுவனால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.