15 லிட்டர் தண்ணீருடன் முதுகில் அலையும் தொழிலதிபர்!
சண்டிகாரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தினமும் 15 லிட்டர் கேனை முதுகில் கட்டிக்கொண்டு சாலை சாலையாக சென்று வருகிறார்
கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வறுத்தெடுக்கும் நிலையில் சாலையில் செல்லும் பொதுமக்கள் சில சமயம் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனை பார்த்த தர்ஷன்சிங் என்ற 65 வயது தொழிலதிபர் தினமும் சாலையில் 15 லிட்டர் தண்ணீர் கேனை சுமந்து சென்று தாகம் எடுத்தவர்களை தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து வருகிறார். இவர் ஒரு பேக்டரிக்கு ஓனர் என்பதும் அந்த பகுதியில் பிரபலமான தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சேவைக்கு ஒரு சல்யூட் அடிப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.