அமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி: செய்வதறியாமல் திகைக்கும் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,480 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை பெரும் பதட்டமடைய செய்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,995 ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலகிலேயே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply