30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்: பெரும் பரபரப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் சுமார் 400 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது மேலும் தமிழகத்தில் மட்டுமே 12 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி வருகின்றன என்பதை அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்தோம். தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை தமிழ்நாடு உள்பட 30 மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மார்ச் 31ம் தேதிக்கு பிறகு நிலைமையை பொறுத்து ஊரடங்கு உத்தரவு நீடிக்க வாய்ப்பு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் கட்டுப்படும் வரை மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பது ஒன்றுதான் வழி என்பதுதுதான் மத்திய, மாநில அரசுகளின் எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply