திமுக வைத்த பேனர் விழுந்ததால் பரபரப்பு: வாயை திறக்காத அரசியல்வாதிகள்

சென்னையில் சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ என்ற இளம் பலியானபோது, கமல்ஹாசன் உள்பட பல அரசியல்வாதிகள் கொந்தளித்தனர்

இந்த நிலையில் இன்று விக்கிரவாண்டியில் திமுக வைத்த ஒன்று சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் இதுகுறித்து இன்னும் யாரும் வாயைத் திறக்காமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

சுபஸ்ரீ மறைந்தவுடன் இனி பேனர்கள் வைக்க மாட்டோம் என முதல் நபராக கூறியது திமுக தலைவர் முக ஸ்டாலின் தான். ஆனால் இன்று விக்கிரவாண்டியில் வைக்கப்பட்டிருந்த திமுக பேனர் திடீரென சரிந்து விழுந்தது

இந்த பேனர் விழுந்ததால் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றாலும் இது கண்டிக்கத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எந்த அரசியல்வாதியும் வாயை திறக்காமல் உள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply