14ஆம் தேதியாவது விடுமுறை விடுங்கள்: அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே வலியுறுத்தியது என்பது தெரிந்ததே

ஆனால் இதுகுறித்து அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால் நாளை கண்டிப்பாக வேலை நாள் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை என்பதால் அன்றைய தினமாவது விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply