1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்

திருவள்ளூர் வேப்பங்குப்பம் அருகே தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான 1381 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் ஆவணங்களை ஒப்படைத்து தங்கத்தை மீட்டனர்.

கடந்த 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த ஒரு மாதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய தங்கங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான 1381 கிலோ தங்கமும் அடங்கும். இந்த நிலையில் இந்த தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்து தங்கத்தை மீட்டனர்.

Leave a Reply