13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண்: ஆந்திராவில் வினோதம்
ஆந்திர மாநிலத்தில் திருமண வயது வராத 13 வயது சுறுவனுக்கு 23 வயது பெண்ணை அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 23 வயது அய்யம்மாள் என்ற பெண்ணுக்கும் இடையே வயது வித்தியாசமின்றி காதல் தோன்றியதாகவும், இந்த காதல் இருவீட்டார் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததும் இருதரப்பினர்களும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த 13 வயது சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.