13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி!
கோவை அருகே நடுப்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 22 வயது மாற்றுத் திறனாளி ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே நடுப்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் 13 வயது பள்ளி மாணவியை அவரது உறவினரான மாற்றித்திறனாளி சதீஷ்குமார் என்பவர் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி கர்ப்பமானதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது சதீஷ்குமாரின் பாலியல் தொல்லைகள் குறித்து அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளியான அவரது உறவினரே பாலியல் தொல்லை கொடுத்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.