13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கண்கள் தோண்டி, நாக்கு துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள லிக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கரும்புத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியை தேடி வந்த போது தான் கரும்பு காட்டில் சிறுமியின் பிணத்தை கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உத்தரப்பிரதேச போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இந்த குற்றம் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது வன்கொடுமை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply