121 போலி நிறுவனங்கள், ரூ.ரூ.270 கோடி வரி ஏய்ப்பு செய்தவர் அதிரடி கைது
சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் இந்தியா முழுவதும் 121 போலி நிறுவங்களை தொடங்கி ரூ.270 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நூற்றுக்கணக்கான போலி நிறுவனங்கள் பிடிப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான கோடி வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த சுஜாராம் என்பவர் இந்தியா முழுவதும் 121 போலி நிறுவனங்களை நடத்தி அந்த போலி நிறுவனங்கள் மூலம் ரூ.270 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக கஜாராமை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது ராஜஸ்தானில் பதுங்கி இருந்த சுஜாராமை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.