12 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ ரெய்டு

சிபிஐ அவ்வப்போது திடீரென நாட்டின் பல இடங்களில் ரெய்டு நடத்தி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இந்தியாவின் 12 மாநிலங்களின் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகள் தொடர்பாக 15 நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக வங்கி மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை குறி வைத்து இந்த ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply