shadow

12 முறை ரசித்துவிட்டு 13வது முறை மட்டும் பாலியல் வன்கொடுமையா? கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு குறித்து அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரைச் சேர்ந்த பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர், 2014 முதல் 2016 வரை 13 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் அளித்தார். இருப்பினும் பிஷப் மூலக்கல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ், “அந்தக் கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் சந்தேகமே இல்லை. பிஷப் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லும் அவர், 12 முறை ரசித்துவிட்டு 13வது முறை மட்டும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறுகிறார்? முதல் முறையே புகார் அளிக்காதது ஏன்?’ எனத் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply