12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து 12ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

நாளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை செய்யும் போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply